கன்னியாகுமரி

திசையன்விளையில் மீன் வியாபாரியை காரை ஏற்றிக் கொல்ல முயற்சி

DIN


திசையன்விளையில் மீன் வியாபாரியை கார் ஏற்றிக் கொல்ல முயன்றவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
திசையன்விளையை அடுத்த மணலிவிளையைச் சேர்ந்த சிம்சன் மகன் சுந்தர் (50). மீன் வியாபாரி. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த கோபால் மகன் மோகன்ராஜ் (40) என்பவருக்கும் முன் விரோதம் இருந்ததாம். சனிக்கிழமை காலை சுந்தர் திசையன்விளை நான்குனேரி சாலையில் நின்று கொண்டிருந்தாராம். அப்போது அந்த வழியாக காரில் வந்த மோகன்ராஜ் காரை வேகமாக ஓட்டி வந்து சுந்தர் மீது மோதியதாக கூறப்படுகிறது.
இதில் சுந்தர் பலத்த காயமடைந்தார். மோதிய காரை அங்கேயே நிறுத்திவிட்டு மோகன்ராஜ் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து திசையன்விளை போலீஸார் வழக்குப் பதிந்து, மோகன்ராஜை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாரணம் ஆயிரம் - பிரபல டிவியின் புதிய தொடர்!

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

மே 5-க்குள் கியூட்-யுஜி தேர்வு மைய அறிவிப்பு வெளியாகும்: யுஜிசி தலைவர்

மேற்கு வங்கம்: கோஷ்டி மோதலில் திரிணமூல் காங். தொண்டர் பலி, பாஜக பெண் தலைவர் காயம்

SCROLL FOR NEXT