கன்னியாகுமரி

பைக் மோதி தொழிலாளி சாவு

DIN

நாகர்கோவிலில் பைக் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தார்.
நாகர்கோவில் வெட்டூர்ணிமடம், கேசவதிருப்பாபுரத்தைச் சேர்ந்தவர் மரிய உபால்டு (61). கட்டடத்  தொழிலாளியான இவர் வெட்டூர்ணிமடம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் மரிய உபால்டு மீது மோதியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர்  ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு  அங்கு  உயிரிழந்தார். 
இதுகுறித்து நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து  வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி முக்கடல் சங்கமம் பகுதியில் அனுமதியின்றி செயல்பட்ட கடைகள் அகற்றம்

குமரியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி

பத்ரகாளியம்மன் கோயில் பால்குட விழா

நடுக்காட்டில் பதுக்கிய 2,000 லிட்டா் சாராய ஊரல் அழிப்பு

தந்தைக்கு கத்தி குத்து: இளைஞா் கைது

SCROLL FOR NEXT