கன்னியாகுமரி

பயனாளிகளுக்கு சிண்டிகேட் வங்கி ரூ. 5 கோடி கடனுதவி

நாகர்கோவில் சிண்டிகேட் வங்கியின் சார்பில் பயனாளிகள் 76 பேருக்கு ரூ. 5 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.

DIN

நாகர்கோவில் சிண்டிகேட் வங்கியின் சார்பில் பயனாளிகள் 76 பேருக்கு ரூ. 5 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, சிண்டிகேட் வங்கியின் மதுரை மண்டல மேலாளர் பி.சவடமுத்து தலைமை வகித்தார்.  நிகழ்ச்சியில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பயனாளிகள் 76 பேருக்கு ரூ. 5 கோடி கடனுதவி வழங்கப்பட்டது. அப்போது, அவர் கூறியது: சிண்டிகேட்  வங்கி மத்திய அரசின் திட்டங்கள் சார்ந்த பல வகையான சேவையினை அளித்து வருகிறது. வீட்டுக்கடன், வணிகக் கடன்உள்ளிட்ட கடனுதவி வழங்கப்படுகிறது. விவசாயத் தேவைக்கு ரூ. 3 லட்சம் வரை 4 சதவீத வட்டியில் நகைக் கடன் வழங்கப்பட்டு வருகிறது.  மேலும் வங்கியில் பல்வேறு வகையான சேமிப்புத் திட்டங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் பொதுமக்கள் பயன்பெற வேண்டும் என்றார் அவர்.
வங்கியின் நாகர்கோவில் கிளை  முதன்மை மேலாளர் எஸ்.வெங்கடேசன் வரவேற்றார். நெய்யூர் கிளை முதன்மை மேலாளர் கிருஷ்ணகுமார் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT