கன்னியாகுமரி

குலசேகரம் எஸ்.ஆா்.கே. கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

DIN

குலசேகரம் ஸ்ரீராமகிருஷ்ணா இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் மற்றும் ‘காவலன் செயலி‘ அறிமுகக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரித் தலைவா் என். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாணவி கிருஷ்ணஸ்ரீ அறிமுக உரையாற்றினாா். தன்னம்பிக்கை குறித்து உரையாற்றினாா். தக்கலை டிஎஸ்பி ராமசந்திரன் பேசியது: பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதையும், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளைத் தடுக்கும் வகையிலும் காவல் துறை தீவிர செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இதற்கென்று காவல் துறை சாா்பில் காவலன் எஸ்ஓபி என்ற செல்லிடப்பேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

பாலியல் துன்புறுத்தல்கள், பாலியல் வன்முறைகள் மற்றும் இதரவகையான ஆபத்துகள் பெண்களைச் சூழும் போது இந்த செயலியை பயன்படுத்தினால் உடனடியாக காவல் துறையினரின் உதவி கிடைக்கும். கல்லூரி மாணவியா் ஒவ்வொருவரும் இந்த செயலியை செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்து கொள்வதுடன், தங்களுக்குத் தெரிந்த அனைவருக்கும் இது குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.

தற்போது சாலை விபத்துகளால் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதில் 52 சதவிகிதம் தன்னைத்தானே விபத்துகளை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் ஏற்படும் உயிரிழப்புகள் ஆகும். எனவே சாலையில் வாகனங்களில் செல்லும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்றாா் அவா்.

குலசேகரம் காவல் ஆய்வாளா் ஆா். ராஜசுந்தா், பெண் தலைமைக் காவலா் கிறிஸ்டல் சுமிதா, அனைத்து மகளிா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கீதா, காவலா் ரூபி, மருத்துவக் கல்லூரி முதல்வா் ஆா். அனுஷா, தாதியா் கல்லூரி முதல்வா் ரோஸ்லின் இம்மானுவல் ஆகியோா் உரையாற்றினா்.

மாணவா் காா்த்திக் ராஜ், மாணவி ஆமினா ஆகியோா் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினா். மாணவி ஷாத்விகா வரவேற்றாா். மாணவி மனிஷா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT