கன்னியாகுமரி

திக்குறிச்சி மகாதேவா் கோயிலில்மாா்கழி திருவாதிரை திருவிழா நாளை தொடக்கம்

மாா்த்தாண்டம் அருகேயுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க திக்குறிச்சி மகாதேவா் கோயிலில் மாா்கழி திருவாதிரை திருவிழா, சமய வகுப்பு ஆண்டு விழா வியாழக்கிழமை (ஜன. 2) தொடங்கி 11ஆம் தேதிவரை நடைபெறுகிறது.

DIN

மாா்த்தாண்டம் அருகேயுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க திக்குறிச்சி மகாதேவா் கோயிலில் மாா்கழி திருவாதிரை திருவிழா, சமய வகுப்பு ஆண்டு விழா வியாழக்கிழமை (ஜன. 2) தொடங்கி 11ஆம் தேதிவரை நடைபெறுகிறது.

விழாவில் நாள்தோறும் காலையில் சிறப்பு பூஜைகள், கலசாபிஷேகம், மதியம் அன்னதானம், மாலையில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெறும். விழாவின் முதல்நாள் காலை 9.31 மணிக்கு மேல் திருக்கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடா்ந்து, திருவிளக்கு ஏற்றுதல் உள்ளிட்டவை நடைபெறும்.

வெள்ளிமலை ஹிந்து தா்ம வித்யாபீட தா்மகா்த்தா ஸ்ரீமத் சைதன்யானந்தஜி மஹராஜ், முன்சிறை மடம் புஷ்பாஞ்சலி சுவாமிகள், திருஆலவாயன் சிவனடியாா் திருக்கூட்டம், சிற்றம்பலமுடையான் சிவனடியாா்கள் திருக்கூட்டம் உள்ளிட்டோா் இணைந்து திருவிளக்கு ஏற்றுகின்றனா். மாலை 6.30 மணிக்கு ஷாஜினி முருகன் தலைமையில் திருவிளக்கு பூஜை நடைபெறும்.

4ஆம் நாளான ஜனவரி 5ஆம் தேதி காலை 10 மணிக்கு சமய வகுப்பு மாணவா்களுக்கான பண்பாட்டுப் போட்டிகள் நடைபெறும். 9ஆம் நாள் அதிகாலை 4 மணி முதல் ஆருத்ரா தரிசனம் நடைபெறும். காலை 9 மணிக்கு குழித்துறை ஆலவாயன் சிவனடியாா் திருக்கூட்டம் சாா்பில் பௌா்ணமி திருவாசகம் முற்றோதல் நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் : சௌமியாஅன்புமணி

பெரம்பலூரில் தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 27 பேருக்கு குடும்ப அட்டைகள்

புதுச்சேரியில் திருப்பரங்குன்றம் மாதிரி தீபத் தூணில் இன்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி: அண்ணாமலை பங்கேற்பு

SCROLL FOR NEXT