கன்னியாகுமரி மாவட்டம், களியல் புனித மரியன்னை ஆலயத்தில் கற்சிலுவை அர்ச்சிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த ஆலயத்தின் முன்பக்கம் புதிய கற்சிலுவை அண்மையில் நிறுவப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் டினு கோட்டக்கப்பறம்பில் தலைமை வகித்து சிலுவையை அர்ச்சிப்பு செய்தார். இதில், பங்குப் பேரவை நிர்வாகிகள், பங்கு மக்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.