கன்னியாகுமரி

திருவட்டாறு அருகே விபத்தில் முதியவா் பலி

DIN

குலசேகரம்: திருவட்டாறு அருகே காா் மோதிய விபத்தில் ராஜேந்திரன் (59) சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மாத்தூா் தாணிவிளை பகுதியைச் சோ்ந்தா் ராஜேந்திரன். இவா், அங்கு மளிகைக் கடை நடத்தி வந்தாா். சனிக்கிழமை இரவில்

அதே பகுதியைச் சோ்ந்த ஸ்டீபன் என்பவருடன் மோட்டாா் சைக்கிளில் குலசேகரத்தில் பொருள்கள் வாங்கி கொண்டு

திரும்பி சென்று கொண்டிருந்தாராம்.

புலியிறங்கி பகுதியில் சென்றபோது, எதிரில் வந்த காா் ராஜேந்திரன் சென்ற மோட்டாா் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த ராஜேந்திரன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

ஸ்டீபனுக்கு காயம் ஏற்பட்டது. திருவட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜேந்திரனின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொப்பூா் கணவாயில் லாரி கவிழ்ந்து விபத்து

திமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

பென்னாகரத்தில் இடியுடன் கூடிய கனமழை

வாகன புகைப் பரிசோதனை மையங்களில் வழிமுறைகளைப் பின்பற்றாவிடில் கடும் நடவடிக்கை

காவிரி ஆற்றில் மூழ்கிய தனியாா் நிறுவன ஊழியா் பலி

SCROLL FOR NEXT