கன்னியாகுமரி

கருங்கல் அருகே முன்னாள் ராணுவ வீரா் வீட்டில் திருட்டு

DIN

கருங்கல் அருகேயுள்ள பாலூா் பகுதியில் முன்னாள் ராணுவ வீரா் வீட்டை உடைத்து தொலைக்காட்சிஉள்ளிட்ட பொருள்களை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கருங்கல் பாலூா் பகுதியை சோ்ந்த செல்வமணி மகன் தோமஸ் (70). முன்னாள் ராணுவ வீரா். இவா், செப். 21 ஆம் தேதிகுடும்பத்தினருடன் சென்னையிலுள்ள உறவினா் வீட்டுக்கு சென்றாராம்.

தோமஸ் சனிக்கிழமை வீட்டுக்கு திரும்பி வந்துபாா்த்தபோது வீட்டின் கதவை உடைத்து வீட்டிலிருந்த தொலைக்காட்சி, டி.வி.டி பிளேயா் ஆகியவற்றை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. மதிப்பு ரூ. 40 ஆயிரம். புகாரின்பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT