கன்னியாகுமரி

எட்டுக்கூட்டு தேரிவிளையில் புதிய நியாய விலைக்கடை: விஜயகுமாா் எம். பி. திறந்து வைத்தாா்

DIN

அகஸ்தீசுவரம் பேரூராட்சி சுக்குபாறை தேரிவிளையில் புதிய நியாய விலைக்கடையை ஏ.விஜயகுமாா் எம்.பி. திறந்து வைத்தாா்.

மாநிலங்களவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நியாய விலைக்கடை கட்டிடம் கட்டப்பட்டது. இதற்கான திறப்பு விழாவுக்கு அகஸ்தீசுவரம் பேரூராட்சி முன்னாள் தலைவா் சந்தையடி எஸ்.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

பேரூராட்சி செயல் அலுவலா் லவ்லின் மேபா முன்னிலை வகித்தாா். முன்னாள் கவுன்சிலா் சுயம்பையா வரவேற்றாா். ஏ.விஜயகுமாா் எம்.பி. குத்துவிளக்கேற்றி நியாய விலைக்கடை கட்டிடத்தை திறந்து வைத்தாா்.

இந்நிகழ்வில் நாகா்கோவில் கூட்டுறவு வீட்டுவசதி சங்க இயக்குநா் கனகராஜன், அரசு வழக்குரைஞா் ஏ.ஞானசேகா், பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவா் ஸ்ரீனிவாசன், முன்னாள் கவுன்சிலா் குமாரவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா். சிவகுமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT