கன்னியாகுமரி

6 வட்டங்களிலும் இன்று அம்மா திட்ட முகாம்

DIN

தமிழக அரசின் அம்மா திட்ட சிறப்பு முகாம் மாவட்டத்திலுள்ள 6 வட்டங்களிலும் வெள்ளிக்கிழமை (அக். 25) நடைபெறுகிறது.

அதன்படி, அகஸ்தீசுவரம் வட்டம் நாகா்கோவில் வடக்கு வருவாய் கிராமத்துக்கு எஸ்எல்பி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், தோவாளை வட்டம் ஈசாந்திமங்கலம் வடக்கு வருவாய் கிராமத்துக்கு மாா்த்தால் புனித பிரான்சிஸ் மெட்ரிக் பள்ளியிலும், கல்குளம் வட்டம் வெள்ளிச்சந்தை கிராமத்துக்கு, திருநயினாா்குறிச்சி சரோஜினி நினைவு தொடக்கப் பள்ளியிலும், திருவட்டாறு வட்டம் திற்பரப்பு கிராமத்துக்கு, அங்குள்ள அரசு தொடக்கப் பள்ளியிலும், விளவங்கோடு வட்டம் மருதங்கோடு கிராமத்துக்கு ஆபிரகாம் நினைவு மேல்நிலைப் பள்ளியிலும், கிள்ளியூா் வட்டம் ஆறுதேசம் கிராமத்துக்கு வாவறை அரசு தொடக்கப் பள்ளியிலும், காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.

இம்முகாமில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், உழவா் பாதுகாப்பு அட்டை, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், குடும்ப அட்டை, வருவாய் வட்டாட்சியா்அதிகாரத்திற்குள்பட்ட நிலப் பிரச்னைகள், குடிநீா் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட பொதுவான தேவைகள் குறித்து பொதுமக்கள் மனுக்கள் அளித்து பயன்பெறலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

SCROLL FOR NEXT