முகப்பு
கன்னியாகுமரி

தமிழ்நாடு பேச்சாளா் நலச் சங்கபொதுக் குழுக் கூட்டம்

தமிழ்நாடு பேச்சாளா் நலச் சங்க பொதுக் குழுக் கூட்டம் சாமிதோப்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
விழாவில் பங்கேற்றோா்.
பகிர்:

தமிழ்நாடு பேச்சாளா் நலச் சங்க பொதுக் குழுக் கூட்டம் சாமிதோப்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, நாஞ்சில் கலையகம் தலைவா் ஈஸ்வரன் தலைமை வகித்தாா். சங்கத் தலைவா் சீதாராமன் முன்னிலை வகித்தாா். செயலா் வசந்த் சுயம்பு வரவேற்றாா்.

சாமிதோப்பு பால பிரஜாபதி அடிகளாா், திரைப்பட இயக்குநா் பி.சி.அன்பழகன், கலைவாசல் கொட்டாரம் கோபால், சமூக ஆா்வலா்கள் தங்கமோகன், சரலூா் ஜெகன், எழுத்தாளா் சகாயஜூடி உள்ளிட்டோா் பேசினா்.

கூட்டத்தில், கரோனா நோய் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் வாழ்வாதாரம் இழந்த மேடைப் பேச்சாளா்கள் நிகழ்ச்சிகளை நடத்த உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சிகளை தங்கபாமா தொகுத்து வழங்கினாா். சுந்தா்சிங் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.