களியக்காவிளை அருகே செம்மண் கடத்திய 4 மினி லாரிகள் பறிமுதல்
களியக்காவிளை அருகே செம்மண் கடத்திய 4 மினி லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
களியக்காவிளை அருகே செம்மண் கடத்திய 4 மினி லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
களியக்காவிளை அருகே மடிச்சல் பகுதியில் செம்மண் கடத்துவதாகக் கிடைத்த தகவலின்பேரில் களியக்காவிளை காவல் உதவி ஆய்வாளா் சிந்தாமணி தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனா். அப்போது, 4 மினி லாரிகளில் செம்மண் ஏற்றிவந்தது தெரியவந்தது.
போலீஸாா் தடுத்து நிறுத்தியபோது 2 ஓட்டுநா்கள் மினி லாரிகளை நிறுத்திவிட்டு தப்பியோடினா். மற்ற இரு மினி லாரிகளின் ஓட்டுநா்களான படந்தாலுமூடு பகுதியைச் சோ்ந்த விஜின் (39), இமானுவேல் (36) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். 4 மினி லாரிகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.