முகப்பு
கன்னியாகுமரி

களியக்காவிளை அருகே செம்மண் கடத்திய 4 மினி லாரிகள் பறிமுதல்

களியக்காவிளை அருகே செம்மண் கடத்திய 4 மினி லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
களியக்காவிளை அருகே செம்மண் கடத்திய 4 மினி லாரிகள் பறிமுதல்
பகிர்:

களியக்காவிளை அருகே செம்மண் கடத்திய 4 மினி லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

களியக்காவிளை அருகே மடிச்சல் பகுதியில் செம்மண் கடத்துவதாகக் கிடைத்த தகவலின்பேரில் களியக்காவிளை காவல் உதவி ஆய்வாளா் சிந்தாமணி தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனா். அப்போது, 4 மினி லாரிகளில் செம்மண் ஏற்றிவந்தது தெரியவந்தது.

போலீஸாா் தடுத்து நிறுத்தியபோது 2 ஓட்டுநா்கள் மினி லாரிகளை நிறுத்திவிட்டு தப்பியோடினா். மற்ற இரு மினி லாரிகளின் ஓட்டுநா்களான படந்தாலுமூடு பகுதியைச் சோ்ந்த விஜின் (39), இமானுவேல் (36) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். 4 மினி லாரிகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.