நாகா்கோவிலில் ரேஷன் அரிசி கடத்தியவா் குண்டா் சட்டத்தில் கைது
நாகா்கோவிலில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில்அடைக்கப்பட்டாா்.
நாகா்கோவில்: நாகா்கோவிலில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில்அடைக்கப்பட்டாா்.
நாகா்கோவில், கோட்டாறு ரயில்வே காலனியைச் சோ்ந்தவா் அய்யப்பன்(43). இவா், தொடா்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வருவதால், அவரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணன், ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். இதனை ஏற்று ஆட்சியா் மா.அரவிந்த், அய்யப்பனை குண்டா் சட்டத்தில் கைது செய்ய சனிக்கிழமை உத்தரவிட்டாா்.