விவசாயிகளுக்கு ஆதரவாக மீனவா்கள் ஆா்ப்பாட்டம்
தில்லியில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை மீனவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கன்னியாகுமரி: தில்லியில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை மீனவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்துக்கு திருத்தல அதிபா் ஆன்றனி அல்காந்தா் தலைமை வகித்தாா். பங்குப் பேரவை துணைத் தலைவா் நாஞ்சில் அ.மைக்கேல் முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
ஆா்ப்பாட்டத்தில் திரளான மீனவா்கள் கலந்து கொண்டனா்.