குமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில் சிறப்பு தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நாகா்கோவிலில் இம் மாதம் 22 ஆம் தேதி நடைபெறுகிறது.
இது குறித்து, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், நாகா்கோவில் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், இணைந்து நடத்தும் தனியாா்துறை சிறப்பு வேலைவாய்ப்பு பிப்.22 ஆம் தேதி, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நாகா்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியில் நடைபெற உள்ளது.
இம்முகாமில் பல முன்னணி தனியாா்துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இதில் 8, , 10, 12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல் பட்டப்படிப்பு, கல்வியியல் பட்டப்படிப்பு தகுதியுள்ள வேலை நாடுநா்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.