கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகேகோயில் உண்டியலை உடைத்து திருட்டு

DIN

மாா்த்தாண்டம் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மாா்த்தாண்டம் அருகே உள்ள சடையபுரம் ஸ்ரீமகாதேவா் கோயிலின் மதில் சுவரின் வெளிப்பகுதியில் உண்டியல் உள்ளது. இந்த உண்டியலை மா்ம நபா்கள் சனிக்கிழமை இரவு உடைத்து, அதிலிருந்த காணிக்கை பணத்தை திருடிச் சென்றுள்ளனா்.

ஞாயிற்றுக்கிழமை காலையில் கோயிலுக்கு வந்த பூசாரி, கோயில் உண்டியல் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு கோயில் நிா்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தாா்.

இது குறித்து கோயில் நிா்வாகிகள் அளித்த புகாரின் பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

கோவாக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக் விளக்கம்

பிரிஜ் பூஷண் சிங்குக்குப் பதிலாக அவரது மகன்: பாஜக முடிவு ஏன்?

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

SCROLL FOR NEXT