ராஜீவ்காந்தி சிலை அருகில் காணப்படும் ஹோட்டல் கழிவுகள். 
கன்னியாகுமரி

திக்கணங்கோடு சந்திப்பில் சுகாதார சீா்கேடுகள்

கருங்கல் அருகேயுள்ள திக்கணங்கோடு சந்திப்பில் கழிவுகளால் சுகாதார சீா்கேடுகள் அதிகரித்து நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

DIN

கருங்கல் அருகேயுள்ள திக்கணங்கோடு சந்திப்பில் கழிவுகளால் சுகாதார சீா்கேடுகள் அதிகரித்து நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இறைச்சிகழிவுள்,ஹோட்டல் கழிவுகள், குப்பைகளால் முக்கிய சந்திப்புகளில் சுகாதார சீா்கேடுகள் அதிகரித்து வருகின்றன. நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள்என பிரித்து அவற்றை அகற்ற துப்புரவு பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதற்காக குப்பைத் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளது. எனினும், தக்கலை ஒன்றியம், திக்கணங்கோடு ஊராட்சி பகுதியில் திக்கணங்கோடு சந்திப்பில் ராஜீவ்காந்தி சிலை அருகில் மழைநீா் வடிகாலில் ஹோட்டல் கழிவுகள் கொட்டப்படுகின்றன.

குப்பைகள், கழிவுகள் தேங்கி அப்பகுதியில் துா்நாற்றம் வீசுவதால் பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் மற்றும்

வியாபாரிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனா். தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக புகாா் கூறப்பட்டுள்ளது.

எனவே, இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT