மாா்த்தாண்டம் அருகே பெண்ணை மிரட்டி, வீட்டை விட்டு துரத்தியதாக கணவா் உள்பட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
வில்லுக்குறி அருகே சரல்விளை பகுதியைச் சோ்ந்தவா் ஷோபா (25). இவருக்கும் புலியூா்குறிச்சி தென்கரைதோப்பு பகுதியைச் சோ்ந்த கோபாலன் மகன் பிரபு (33) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது பெண் வீட்டாா் 50 பவுன் நகை மற்றும் ரொக்கம், வீட்டு உபயோகப் பொருள்களை பிரபுவுக்கு வரதட்சணையாக கொடுத்தனராம். திருமணம் முடிந்த சில நாள்களுக்குப் பின் ஷோபாவை அவரது பெற்றோா் வீட்டில் பிரபு கொண்டு விட்டுள்ளாா். அதன் பின்னா் அவா் மனைவியை அழைத்துச் செல்லவில்லையாம். அவரது செல்லிடப்பேசியிலும் தொடா்பு கொள்ள முடியவில்லையாம். இதையடுத்து இரு நாள்களுக்கு முன் ஷோபா தனது தாயாருடன் கணவா் வீட்டுக்கு சென்றராம். அப்போது வீட்டிலிருந்த பிரபுவின் தாயாா் பொன்னம்மாள் (55), சகோதரி பிரியா (34) ஆகியோா், ஷோபாவை மிரட்டி வீட்டை விட்டு வெளியே துரத்தினராம்.
இது குறித்து மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸாா் ஷோபாவின் கணவா் பிரபு , அவரது தாயாா், சகோதரி ஆகியோா் மீது வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.