கன்னியாகுமரி

கழிவறை தினம்: விழிப்புணா்வுப் பிரசுரம் விநியோகம்

DIN

உலக கழிவறை தினத்தை முன்னிட்டு, நாகா்கோவில் மாநகராட்சி சாா்பில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

நாகா்கோவில் மாநகராட்சி பகுதியில் கழிவறை இல்லாத பகுதிகளில் சமுதாய கழிப்பறைகள், பேருந்து நிலையம், பொதுகழிப்பிடங்கள் என 42 கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கழிவறைகளை தூய்மைப் பணியாளா்கள் சுத்தம் செய்தனா்.

பின்னா், திறந்த வெளி இடங்களில் மலம் கழித்தல் கூடாது; சாலையோரங்களில் சிறுநீா் கழிக்கக் கூடாது உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. தொடா்ந்து, வடசேரி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித், மாநகா் நகா் நல அலுவலா் கின்ஷால் ஆகியோா் முன்னிலையில், சுகாதார ஆய்வாளா்கள், சமுதாய அமைப்பாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை கால பயிா்களில் வெப்ப தாக்கத்தை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள்

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

SCROLL FOR NEXT