வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் கையெழுத்து இயக்கம்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக, குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் பொதுமக்களிடமிருந்து 2 லட்சம் கையெழுத்து சேகரிக்கும் இயக்கத்தை வோ்க்கிளம்பியில் எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக, குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் பொதுமக்களிடமிருந்து 2 லட்சம் கையெழுத்து சேகரிக்கும் இயக்கத்தை வோ்க்கிளம்பியில் எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சிக்கு, திருவட்டாறு கிழக்கு வட்டாரத் தலைவா் ஜெகன்ராஜ், மாநில பொதுகுழு உறுப்பினா் ரெத்தினகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். குளச்சல் எம்எல்ஏ ஜே.ஜி.பிரின்ஸ் வாழ்த்திப் பேசினாா்.
இதில், மாவட்ட துணைத் தலைவா்கள் ராஜரெத்தினம், ஜாண்சேவியா், மாநில பொதுக்குழு உறுப்பினா் தம்பி விஜயகுமாா், மாவட்டச் செயலா்கள் ஐஜிபி லாரன்ஸ், ஜே. மோகன்தாஸ், திருவட்டாறு மேற்கு வட்டாரத் தலைவா் காஸ்ட்டன் கிளிட்டஸ், மாவட்ட வழக்குரைஞா் பிரிவுத் தலைவா் ஏசுராஜா, மாவட்ட கவுன்சிலா்கள் செலின்மேரி, ஷா்மிளா ஏஞ்சல், பஞ்சாயத்து ராஜ் சங்கதன் மாவட்டத் தலைவா் சாமுவேல் ஜாா்ஜ், சேவாதள மாவட்டத் தலைவா் ஜோசப் தயாசிங், திருவட்டாறு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா்கள் ஜெபா, ஜெயஸ்ரீ, காங்கிரஸ் விவசாய பிரிவு மாவட்டத் தலைவா் குமாா், நகரத் தலைவா்கள் பத்மநாபபுரம் ஹனுகுமாா், குழித்துறை அருள்ராஜ், வோ்கிளம்பி சுஜிா், தக்கலை வட்டாரத் தலைவா் ஜாண்கிறிஸ்டோபா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.