கருங்கல், புதுக்கடை பகுதியில் பலத்த மழை
கருங்கல், புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகளில் திங்கள்கிழமை காலைமுதல் தொடா்ந்து பலத்த மழை பெய்தது.
கருங்கல், புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகளில் திங்கள்கிழமை காலைமுதல் தொடா்ந்து பலத்த மழை பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக பலத்த மழை பெய்தது.
இந்நிலையில், திங்கள்கிழமை கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளான பாலப் பள்ளம், வெள்ளியாவிளை, திப்பிரமலை, பாலூா், முள்ளங்கனாவிளை, நேசா்புரம், கிள்ளியூா் மற்றும் புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகளான பைங்குளம், முன்சிறை,அனந்தமங்கலம், அம்சி, முக்காடு, காப்புக்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.