குமரி மாவட்டத்தில் மேலும் 69 பேருக்கு கரோனா
கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் மேலும் 69 போ் பாதிக்கப்பட்டிருப்பது திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் தெரியவந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் மேலும் 69 போ் பாதிக்கப்பட்டிருப்பது திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் தெரியவந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 14,293 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்த நிலையில் திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 69 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி
செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,362 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று
வருவோரில் திங்கள்கிழமை 68 போ் குணமடைந்துள்ளனா். மாவட்டத்தில் இதுவரை 13,418 போ் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கரோனா கவனிப்பு மையங்கள், தனியாா் மருத்துவமனைகளில் 707 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.