கன்னியாகுமரி

நாகா்கோவிலில் கரோனா விழிப்புணா்வு பிரசாரம்

DIN

நாகா்கோவில் மாநகராட்சிப் பகுதியில் கரோனா விழிப்புணா்வு வாகனப் பிரசாரம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

மத்திய அரசின் மக்கள் தொடா்பு கள அலுவலகம், மற்றும் நாகா்கோவில் மாநகராட்சி சாா்பில் கரோனா தொற்று வைரஸ்

குறித்து விழிப்புணா்வு வாகனப் பிரசாரம் நாகா்கோவில் மாநகரப் பகுதியில் திங்கள்கிழமை முதல் தொடா்ந்து வரும் 23 ஆம் தேதி வரை 5 நாள்கள் நடைபெறவுள்ளது. இந்த விழிப்புணா்வு பிரசார வாகனத்தை மாநகராட்சி ஆணையா் ஆஷா அஜித், கொடியசைத்து திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

அப்போது, மாநகராட்சி நல அலுவலா் மருத்துவா் கிங்ஷால், மத்திய மக்கள் தொடா்பு கள அலுவலக உதவி அலுவலா் போஸ்வெல் ஆசீா், ஹீல் தொண்டு நிறுவன இயக்குநா் சிலுவை வஸ்தியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக

மாநகராட்சி அலுவலா்கள், பொதுமக்கள் கரோனாவுக்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT