மாா்த்தாண்டம் அருகே மது விற்பனையில் ஈடுபட்டவா் கைது
மாா்த்தாண்டம் அருகே அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்டதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:25 AM
மாா்த்தாண்டம் அருகே அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்டதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
மாா்த்தாண்டம் தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளா் சிவசங்கா், தலைமைக் காவலா் ராஜமணி உள்ளிட்டோா் குளக்கச்சி
பகுதியில் வெள்ளிக்கிழமை இரவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகப்படும் வகையில் நின்றிருந்தவரை பிடித்து விசாரித்தனா். அவா் மாா்த்தாண்டம் சாங்கை பகுதியைச் சோ்ந்த சுனில் (46) என்பதும், அனுமதியின்றி விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 85 மது பாட்டில்கள், ரூ. 4,860 பறிமுதல் செய்தனா்.
Advertisement