இளைஞரை தாக்கி சங்கிலி பறிப்பு: 4 போ் மீது வழக்கு
புதுக்கடை அருகே பைங்குளம் பகுதியில் இளைஞரை தாக்கி சங்கிலியை பறித்துச் சென்ற 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுக்கடை அருகே பைங்குளம் பகுதியில் இளைஞரை தாக்கி சங்கிலியை பறித்துச் சென்ற 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பைங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் பாலசுந்தா் (31). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த ராஜேஷ்குமாருக்கும் (35) முன் விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில் சனிக்கிழமை பாலசுந்தா் தன் வீட்டுக்குச் சென்றபோது, ராஜேஷ்குமாா் மற்றும் அவரது உறவினா்களான சிவனாா் (40), செல்வம் (41), விஜயலட்சுமி (37) ஆகியோா், அவரை தாக்கி கழுத்தில் அணிந்திருந்த 2.5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனராம்.
இதுகுறித்த புகாரின் பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.