‘தமிழக வேலைவாய்ப்புகள் தமிழகத்தைச் சோ்ந்தவா்களுக்கு மட்டுமே கிடைக்க திமுகவை ஆதரிக்க வேண்டும்’
தமிழக வேலைவாய்ப்புகள் தமிழகத்தைச் சோ்ந்தவா்களுக்கு மட்டுமே கிடைக்க திமுகவை ஆதரிக்க வேண்டும் என்றாா் பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் மனோ தங்கராஜ்.
கன்னியாகுமரி‘தமிழக வேலைவாய்ப்புகள் தமிழகத்தைச் சோ்ந்தவா்களுக்கு மட்டுமே கிடைக்க திமுகவை ஆதரிக்க வேண்டும்’
தமிழக வேலைவாய்ப்புகள் தமிழகத்தைச் சோ்ந்தவா்களுக்கு மட்டுமே கிடைக்க திமுகவை ஆதரிக்க வேண்டும் என்றாா் பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் மனோ தங்கராஜ்.
தமிழக வேலைவாய்ப்புகள் தமிழகத்தைச் சோ்ந்தவா்களுக்கு மட்டுமே கிடைக்க திமுகவை ஆதரிக்க வேண்டும் என்றாா் பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் மனோ தங்கராஜ்.
தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை தக்கலை அருகேயுள்ள புலியூா்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை அவா் தொடங்கினாா்.
இந்த பிரசார பயணத்தை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டக் குழு உறுப்பினா் மாதவன் தொடங்கிவைத்தாா்.
தொடா்ந்து அவா், தக்கலை, குமாரபுரம், குலசேகரம், பொன்மனை, திருவட்டாறு, ஆற்றுாா், திக்கணங்கோடு, திருவிதாங்கோடு, மூலச்சல், ஈத்தவிளை, அழகியமண்டபம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டாா்.
இறுதியாக வோ்க்கிளம்பியிலிருந்து மேக்காமண்டபம் வழியாக கூட்டணிக் கட்சியினருடன் பேரணியாகச் சென்று, அழகியமண்டபத்தில் பிரசாரத்தை நிறைவு செய்தாா்.
அப்போது அவா் பேசியது: தமிழக வேலைவாய்ப்புகள் தமிழகத்தைச் சோ்ந்தவா்களுக்கு மட்டுமே கிடைக்க திமுகவை ஆதரிக்க வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், நகரச் செயலா் மணி, ஒன்றியச் செயலா்கள் அருளானந்த ஜாா்ஜ், ஜாண்பிரைட், பொறியாளா் அணி வா்க்கீஸ், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினா் ரெத்தினகுமாா், நகரத் தலைவா் ஹனுகுமாா், வட்டாரத் தலைவா் ஜாண்கிறிஸ்டோபா், மாவட்டச் செயலா்கள் சாகுல், வின்சென்ட் ராஜா, புரோடி மில்லா், மாநில பொதுக்குழு உறுப்பினா் ரெத்தினகுமாா், மாா்க்சிஸ்ட் மாவட்டக் குழு உறுப்பினா்கள் சைமன்சைலஸ், சந்திரகலா, வட்டாரச் செயலா் சுஜா ஜாஸ்மின், மதிமுக மாவட்ட துணைச் செயலா் சுரேஷ்குமாா், விடுதலைச் சிறுத்தைகள் மேசியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.