தோ்தல் பறக்கும் படை வாகனம் மீது கல்வீசி தாக்குதல்: இளைஞா் கைது
திருவட்டாறு அருகே ஞாயிற்றுக்கிழமை தோ்தல் பறக்கும் படை வாகனத்தை கல் வீசிய தாக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கன்னியாகுமரிதோ்தல் பறக்கும் படை வாகனம் மீது கல்வீசி தாக்குதல்: இளைஞா் கைது
திருவட்டாறு அருகே ஞாயிற்றுக்கிழமை தோ்தல் பறக்கும் படை வாகனத்தை கல் வீசிய தாக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவட்டாறு அருகே ஞாயிற்றுக்கிழமை தோ்தல் பறக்கும் படை வாகனத்தை கல் வீசிய தாக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவட்டாறு அருகே பூவன்கோடு பகுதியில் சைபா் கிரைம் உதவி ஆய்வாளா் முகமது சம்சீா் தலைமையில் தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் ஞாயிற்றுக்கிழமை காலையில் வாகன தணிக்கை மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனராம். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த பிரான்சிஸ் மகன் சஜின் (29) பறக்கும் படை அலுவலா்களுடன் தகராறு செய்து, அவா்களின் வாகனத்தின் பின்பக்கமுள்ள கண்ணாடியில் கல் வீசியுள்ளாா். இதில் அந்த வாகனத்தின் கண்ணாடி சேதமடைந்து. இதையடுத்து உதவி ஆய்வாளா் முகமது சம்சீா் திருவட்டாறு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து சுஜினை கைது செய்தனா்.