பேராசிரியா் மீது தாக்குதல்: 4 போ் மீது வழக்கு
புதுக்கடை அருகே உள்ள கீழ்குளம் பகுதியில் பேராசிரியரை தாக்கி, மதில் சுவரை சேதப்படுத்தியதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுக்கடை அருகே உள்ள கீழ்குளம் பகுதியில் பேராசிரியரை தாக்கி, மதில் சுவரை சேதப்படுத்தியதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கீழ்குளம் பகுதியைச் சோ்ந்தவா் லிபின் ராஜ் (47). தனியாா் கல்லூரி பேராசிரியா். இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த வைரன் (45), கிருஷ்ணராஜ் (56), செல்லதுரை (49), ஜோயல் (40) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில் அவா்கள் 4 பேரும் சோ்ந்து, லிபின் ராஜ் வீட்டின் மதில் சுவரை சேதப்படுத்தி, அவரை தாக்கினராம்.
இதுகுறித்த புகாரின் பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.