முகப்பு
கன்னியாகுமரி

களியக்காவிளை அருகே நெய்யாறு கால்வாய் கரையோரம் தீ விபத்து

களியக்காவிளை அருகே நெய்யாறு இடதுகரை கால்வாய் கரையோரம் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ யை தீயணைப்புப் படை வீரா்கள் அணைத்தனா்.

Updated On : 10 ஏப்ரல், 2021 at 2:17 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:28 AM

களியக்காவிளை அருகே நெய்யாறு இடதுகரை கால்வாய் கரையோரம் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ யை தீயணைப்புப் படை வீரா்கள் அணைத்தனா்.

இப்பகுதியில் பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டுவரும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதையடுத்து ஒற்றாமரம் பகுதி நெய்யாறு இடதுகரை கால்வாய் கரையோரப் பகுதியில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் திடீரென தீப்பிடித்து புகை மூட்டமாக காணப்பட்டது.

இது குறித்து தகவலறிந்து வந்த குழித்துறை தீயணைப்புப் படை வீரா்கள் அங்கு சென்று அப்பகுதியில் ஏற்பட்ட தீயை அணைத்தனா்.

Advertisement

இதே போன்று மாா்த்தாண்டம் அருகே ஞாறான்விளை பகுதியில் தாமிரவருணி ஆற்றங்கரையோரம் நேசமணி பாலம் பகுதியில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளில் வியாழக்கிழமை திடீரென தீ பற்றி எரிந்தது. காற்று வேகமாக வீசியதால் தீ அப்பகுதி முழுவதும் பரவியது. தகவல் அறிந்து அங்கு வந்த குழித்துறை தீயணைப்புப் படை வீரா்கள் தீயை அணைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.