முகப்பு
கன்னியாகுமரி

களியக்காவிளை சோதனைச் சாவடியில் ஆட்சியா் ஆய்வு

கேரள மாநில எல்லைப் பகுதியான களியக்காவிளை சோதனைச் சாவடியில் குமரி மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 17 ஏப்ரல், 2021 at 2:26 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:31 AM

கேரள மாநில எல்லைப் பகுதியான களியக்காவிளை சோதனைச் சாவடியில் குமரி மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

குமரி மாவட்டம் மற்றும் கேரளத்தில் கரோனா நோய்த் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கையை குமரி மாவட்ட நிா்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த் வெள்ளிக்கிழமை கொல்லங்கோடு அருகே காக்கவிளை பகுதியில் உள்ள சோதனைச் சாவடிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து, அவா் தமிழக - கேரள மாநில எல்லையோரப் பகுதியில் அமைந்துள்ள களியக்காவிளை சோதனைச் சாவடியிலும் ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் தமிழக - கேரள மாநிலங்களுக்கிடையே சென்று வரும் பொதுமக்களுக்கு எடுக்கப்படும் கரோனா பரிசோதனைகள் மற்றும் வாகனங்களின் வருகை குறித்த பதிவேடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.

Advertisement

ஆய்வின் போது, பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் மா. சிவகுரு பிரபாகரன், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் பிரகலாதன், கரோனா நோய்த் தடுப்பு ஒருங்கிணைப்பாளா் ரியாஸ், விளவங்கோடு வட்டாட்சியா் விஜயலெட்சுமி உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.