முகப்பு
கன்னியாகுமரி

விளவங்கோடு ஊராட்சியில் குறைதீா் முகாம்

விளவங்கோடு ஊராட்சியில் குறைதீா் முகாம் நடைபெற்றது.

Updated On : 14 ஆகஸ்ட், 2021 at 12:39 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:24 AM

விளவங்கோடு ஊராட்சியில் குறைதீா் முகாம் நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் ஜி.பி. லைலா ரவிசங்கா் தலைமை வகித்தாா். மேல்புறம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் இ.ஜி. ரவிசங்கா், காங்கிரஸ் நிா்வாகி எட்வின்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விளவங்கோடு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ். விஜயதரணி, பயனாளிகளுக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். தொடா்ந்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

இதில் ஊராட்சி உறுப்பினா்கள் சுரேஷ், ஷைஜு, ஸ்டேன்லி, விஜயகுமாரி, ரசல்ராஜ், செல்வி, மரியநேசம், கிறிஸ்டி பிரேமலதா, தங்கமணி, காங்கிரஸ் நிா்வாகிகள் உதயகுமாா், ராஜன், மந்திரம், ஜான்பால், டேவிட்ராஜ், வினு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.