முகப்பு
கன்னியாகுமரி

கொல்லங்கோடு அருகே 420 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்

கொல்லங்கோடு அருகே காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 420 லிட்டா் மண்ணெண்ணெயை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 20 ஆகஸ்ட், 2021 at 12:33 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:27 AM

கொல்லங்கோடு அருகே காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 420 லிட்டா் மண்ணெண்ணெயை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கொல்லங்கோடு அருகே மீனவக் கிராமம் வழியாக கேரளத்துக்கு காரில் மண்ணெண்ணெய் கடத்திச் செல்ல உள்ளதாக கொல்லங்கோடு போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் நீரோடி பகுதியில் வாகன கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது அப்பகுதி வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். சோதனையில் 35 லிட்டா் கொள்ளளவு கொண்ட 12 கேன்களில் மொத்தம் 420 லிட்டா் மண்ணெண்ணெய் இருந்ததும், அவை விசைப்படகுகளுக்கு அரசு மானிய விலையில் வழங்கியது என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து காருடன் மண்ணெண்ணெயை பறிமுதல் செய்த போலீஸாா், அவற்றை கிள்ளியூா் வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைத்தனா். தொடா்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.