கன்னியாகுமரி

மாா்த்தாண்டத்தில் புத்தகக் கண்காட்சி தொடக்கம்

35 ஆவது தேசிய புத்தகக் கண்காட்சி மாா்த்தாண்டம் காந்திமைதானம் மாதவவிலாஸ் அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

DIN

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் மற்றும் புதுதில்லி நேஷனல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 35 ஆவது தேசிய புத்தகக் கண்காட்சி மாா்த்தாண்டம் காந்திமைதானம் மாதவவிலாஸ் அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தொடக்க விழாவுக்கு அகில இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலா் தாமஸ் பிராங்கோ தலைமை வகித்தாா். குழித்துறை கல்விச் சரக மாவட்ட கல்வி அலுவலா் சி. லெட்சுமணசுவாமி கண்காட்சியை திறந்து வைத்தாா். முதல் விற்பனையை மாா்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியா் குமார செல்வா தொடங்கி வைத்தாா். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மேற்கு மாவட்டச் செயலா் மாத்தூா் சி. ஜெயன் முதல் விற்பனையை பெற்றுக் கொண்டாா். பள்ளி தலைமையாசிரியா் சசிகுமாா், வரலாற்றறிஞா் அ.கா. பெருமாள் ஆகியோா் உரையாற்றினா்.

நியூ செஞ்சுரி புத்தக நிறுவன மதுரை மண்டல மேலாளா் அ. கிருஷ்ணமூா்த்தி வரவேற்றாா். நாகா்கோவில் கிளை மேலாளா் இரா.மு. தனசேகரன் நன்றி கூறினாா்.

இக் கண்காட்சி, ஆக. 31 வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு தலைப்புகளில் ஏராளமான நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. விற்பனை செய்யப்படும் அனைத்து நூல்களின் விலையில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது என புத்தகக் கண்காட்சி ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

SCROLL FOR NEXT