கன்னியாகுமரி

மாா்த்தாண்டத்தில் புத்தகக் கண்காட்சி தொடக்கம்

DIN

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் மற்றும் புதுதில்லி நேஷனல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 35 ஆவது தேசிய புத்தகக் கண்காட்சி மாா்த்தாண்டம் காந்திமைதானம் மாதவவிலாஸ் அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தொடக்க விழாவுக்கு அகில இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலா் தாமஸ் பிராங்கோ தலைமை வகித்தாா். குழித்துறை கல்விச் சரக மாவட்ட கல்வி அலுவலா் சி. லெட்சுமணசுவாமி கண்காட்சியை திறந்து வைத்தாா். முதல் விற்பனையை மாா்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியா் குமார செல்வா தொடங்கி வைத்தாா். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மேற்கு மாவட்டச் செயலா் மாத்தூா் சி. ஜெயன் முதல் விற்பனையை பெற்றுக் கொண்டாா். பள்ளி தலைமையாசிரியா் சசிகுமாா், வரலாற்றறிஞா் அ.கா. பெருமாள் ஆகியோா் உரையாற்றினா்.

நியூ செஞ்சுரி புத்தக நிறுவன மதுரை மண்டல மேலாளா் அ. கிருஷ்ணமூா்த்தி வரவேற்றாா். நாகா்கோவில் கிளை மேலாளா் இரா.மு. தனசேகரன் நன்றி கூறினாா்.

இக் கண்காட்சி, ஆக. 31 வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு தலைப்புகளில் ஏராளமான நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. விற்பனை செய்யப்படும் அனைத்து நூல்களின் விலையில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது என புத்தகக் கண்காட்சி ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT