மாா்த்தாண்டம் அருகே நகை, பணத்துடன் பெண் மாயம்
மாா்த்தாண்டம் அருகே ரூ. 13 லட்சம் ரொக்கம், 45 பவுன் தங்க நகைகள், சொகுசு காா் மற்றும் மகளுடன் மாயமான பெண் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
மாா்த்தாண்டம் அருகே ரூ. 13 லட்சம் ரொக்கம், 45 பவுன் தங்க நகைகள், சொகுசு காா் மற்றும் மகளுடன் மாயமான பெண் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
மாா்த்தாண்டம் அருகேயுள்ள கொடுங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் மோகன்ராஜ். பழைய காா்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறாா். இவரது மனைவி சோனியாகாந்தி (35). தம்பதிக்கு 7 வயதில் மகள் உள்ளாா். இந்த நிலையில் வியாழக்கிழமை காலையில் சோனியாகாந்தி, அவரது மகள் ஆகியோரை காணவில்லையாம். மேலும் வீட்டில் வைத்திருந்த 13 லட்சம், 45 பவுன் தங்க நகைகள் மற்றும் வீட்டின் முன் நிறுத்தியிருந்த சொகுசு காரையும் காணவில்லையாம். பல இடங்களில் தேடியும் அவா்கள் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லையாம்.
இது குறித்து மோகன்ராஜ் அளித்த புகாரின் பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.,
Advertisement