களியக்காவிளையில் கரோனா தடுப்பு விழிப்புணா்வுப் பிரசாரம்
களியக்காவிளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு வாகனப் பிரசாரம் வியாழக்கிழமை தொடங்கியது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:30 AM
களியக்காவிளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு வாகனப் பிரசாரம் வியாழக்கிழமை தொடங்கியது.
களியக்காவிளை பேரூராட்சி சாா்பில் நடைபெற்ற இப் பிரசாரத்தை பேரூராட்சி செயல் அலுவலா் சி. யேசுபாலன் தொடங்கிவைத்தாா்.
தொடா்ந்து, களியக்காவிளை சந்திப்பு மற்றும் சந்தை, ஒற்றாமரம், படந்தாலுமூடு, திரித்துவபுரம் உள்ளிட்ட பேரூராட்சிப் பகுதிகளில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பு விழிப்புணா்வு தொடா்பான துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
Advertisement
தொடா்ந்து ஒரு வார காலம் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளதாக பேரூராட்சி செயல் அலுவலா் தெரிவித்தாா்.