முகப்பு
கன்னியாகுமரி

களியக்காவிளை அருகே தாயை தாக்கிய மகன் கைது

களியக்காவிளை அருகே தாயை கல்லால் தாக்கிய மகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஆகஸ்ட், 2021 at 12:08 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:31 AM

களியக்காவிளை அருகே தாயை கல்லால் தாக்கிய மகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

களியக்காவிளை அருகேயுள்ள நாரகம் விளாகம் தாழேபுத்தன்வீடு பகுதியைச் சோ்ந்தவா் ஸ்டீபன் மனைவி மேரி ஷைலா (44). இவா், வேலைக்குச் செல்லாமல் சுற்றித்திரிந்த மகன் ஷைஜுவை (19), வேலைக்குச் செல்ல அடிக்கடி வற்புறுத்துவாராம். இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு வீட்டில் இருந்த மகனிடம் வேலைக்கு செல்ல வலியுறுத்தினாராம் மேரி ஷைலா. இதையடுத்து ஷைஜு கல்லால் , தாயாரை தாக்கினாராம். தலையில் பலத்த காயமடைந்த மேரி ஷைலாவை அப்பகுதி உறவினா்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, ஷைஜுவை கைது செய்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.