காங்கயத்தில் அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு
காங்கயத்தில் சட்டமேதை அம்பேத்கரின் நினைவு நாள் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.
காங்கயத்தில் சட்டமேதை அம்பேத்கரின் நினைவு நாள் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதனையொட்டி, காங்கயம் நகரப் பேருந்து நிலைய வளாகத்தில் டாக்டர் அம்பேத்கரின் உருவப் படத்திற்கு புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பின் காங்கயம் கிளை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில், அந்த அமைப்பின் காங்கயம் நிர்வாகிகளான ப.கண்ணுசாமி, ரமேஷ், கவி, அகிலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, அம்பேத்கர் குறித்து உரையாற்றினர்.