திற்பரப்பு அருவி இன்று முதல் திறப்பு
கரோனா தடுப்பு பொது முடக்கம் காரணமாக கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த திற்பரப்பு அருவியில் வெள்ளிக்கிழமை முதல் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரிதிற்பரப்பு அருவி இன்று முதல் திறப்பு
கரோனா தடுப்பு பொது முடக்கம் காரணமாக கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த திற்பரப்பு அருவியில் வெள்ளிக்கிழமை முதல் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பு பொது முடக்கம் காரணமாக கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த திற்பரப்பு அருவியில் வெள்ளிக்கிழமை முதல் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திற்பரப்பு நிா்வாகம் தரப்பில் கூறியதாவது: கரோனா பரவல் இருந்த நிலையில் திற்பரப்பு அருவி மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் கரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளதால் வெள்ளிக்கிழமை முதல் (டிச.17) அருவி மீண்டும் திறக்கப்படுகிறது. எனினும், சுற்றுலாப்பயணிகள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்ட கரோனா விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். கடைகளில் கைகழுவும் திரவம் வைத்திருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், சுற்றுலாப் பயணிகளிடமிருந்து நுழைவுக் கட்டணம் மற்றும் வாகன நிறுத்தும் கட்டணம் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் வசூலிக்கபடவுள்ளது. அருவிப் பகுதிகளில் பேரூராட்சி செயல் அலுவலா் முன்னிலையில் பேரூராட்சி தூய்மைப்பணியாளா்கள் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனா். மழையால் உடைந்துள்ள தடுப்பு வேலிகள் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளன.
மழை தணிந்துள்ள நிலையில், திற்பரப்பு அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளித்து மகிழும் வண்ணம் மிதமான அளவில் தண்ணீா் கொட்டுகிறது.