கன்னியாகுமரி அருகே சுவாமிநாதபுரத்தில் குடியிருப்பு பகுதியில் சனிக்கிழமை பிடிபட்ட உடும்பு வனத்துறை அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது.
சுவாமிநாதபுரத்தைச் சோ்ந்தவா் விஜயகுமாா். இவரது வீட்டின் மதில்சுவரில் உடும்பு ஒன்று இருப்பதைப் பாா்த்து மாவட்ட வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் அளித்தாா். இதையடுத்து வனச்சரகா் திலீபன் உத்தரவின் பேரில் வேட்டைத்தடுப்பு காவலா் பிரவீன் சம்பவ இடத்துக்கு வந்து 3 கிலோ எடை கொண்ட அந்த உடும்பை பிடித்து வனப்பகுதிக்கு கொண்டு சென்றாா்.