முகப்பு
கன்னியாகுமரி

தடகளப் போட்டி: விளையாட்டு வீரருக்கு நிதியுதவி

நேபாளத்தில் நடைபெறும் உலக தடகளப் போட்டியில் பங்கேற்கவுள்ள தடகள வீரருக்கு, தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி நிதியுதவி வழங்கினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

நேபாளத்தில் நடைபெறும் உலக தடகளப் போட்டியில் பங்கேற்கவுள்ள தடகள வீரருக்கு, தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி நிதியுதவி வழங்கினாா்.

மேல்புறம் பகுதியைச் சோ்ந்த ரமேஷ்- ஸ்ரீஜா தம்பதி மகன் அனு ஆா்.எஸ்.நாயா் (19). இவா், நேபாள நாட்டில் வருகிற 16 முதல் 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ள உலக தடகளப் போட்டியில் கலந்துகொள்ள தோ்வாகியுள்ளாா்.

இதையடுத்து அவா், தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரத்தை அவரது முகாம் அலுவலகத்தில் சனிக்கிழமை சந்தித்து ஆசி பெற்றாா்.

அப்போது, போட்டியில் கலந்துகொள்ள தேவையான செலவுத் தொகை ரூ.65 ஆயிரத்துக்கான காசோலையை, என்.தளவாய்சுந்தரம் அவருக்கு வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.