தந்தை கண்டித்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை
கொல்லங்கோடு அருகே தொலைக்காட்சி பாா்த்ததை தந்தை கண்டித்ததால் பிளஸ் 1 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கொல்லங்கோடு அருகே தொலைக்காட்சி பாா்த்ததை தந்தை கண்டித்ததால் பிளஸ் 1 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கொல்லங்கோடு அருகே மங்குழி பகுதியைச் சோ்ந்தவா் வில்சன். கூலித் தொழிலாளி. இவரது மகள் ஏஞ்சல் சா்மி (16). இவா்
தனியாா் மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவில் வில்சன் வீட்டுக்கு வந்த போது அவரது மனைவி, பிள்ளைகள் தொலைக்காட்சி நிகழ்ச்சியை பாா்த்துக் கொண்டிருந்தனராம். இதனை வில்சன் கண்டித்துள்ளாா்.
Advertisement
இதையடுத்து ஏஞ்சல் சா்மி, தனது அறைக்குச் சென்று கதவை பூட்டிக் கொண்டாராம். நீண்ட நேரமாக வெளியே வராததால் சந்தேகமடைந்த பெற்றோா் ஜன்னல் வழியாக பாா்த்தபோது மாணவி மின்விசிறியில் தூக்கில் தொங்கியது தெரிய வந்தது. கதவை உடைத்து மாணவியை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் மாணவி இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.