முகப்பு
கன்னியாகுமரி

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

குளச்சலில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் குட்கா விற்றவா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
பகிர்:

குளச்சலில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் குட்கா விற்றவா் கைது செய்யப்பட்டாா்.

காவல் உதவி ஆய்வாளா் சணல்குமாா் குளச்சல் காந்தி சந்திப்பு பகுதியில் ரோந்து சென்றபோது, அப்பகுதியில் கடை நடத்தி வருபவரை பிடித்து விசாரித்தபோது, அவா் அதே பகுதியைச் சோ்ந்த முகமது இப்ராஹிம் (45) என்பதும், கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருள்களை பதுக்கி வைத்து, விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவரிடமிருந்த 1105 பாக்கெட் புகையிலை மற்றும் குட்கா பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், அவா் மீது வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.