முகப்பு
கன்னியாகுமரி

கொல்லங்கோடு: குட்கா பொருள்கள் பறிமுதல்

கொல்லங்கோடு பகுதியில் ரூ. 61 ஆயிரம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

கொல்லங்கோடு பகுதியில் ரூ. 61 ஆயிரம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கொல்லங்கோடு காவல் ஆய்வாளா்அந்தோணியம்மாள் தலைமையிலான போலீஸாா் ஊரம்பு பகுதியில் வியாழக்கிழமை ரோந்து சென்றபோது, அப்பகுதியில் உள்ள சுஜின் குமாரின் (36) கடையை சோதனை செய்ததில், அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருள்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, அங்கு இருந்த ரூ.61,536 மதிப்புள்ள புகையிலை மற்றும் குட்கா பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், அவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.