முகப்பு
கன்னியாகுமரி

புகைப்பட கலைஞருக்கு நிதியுதவி

கன்னியாகுமரி மாவட்ட புகைப்படம் மற்றும் விடியோ கலைஞா்கள் நலச் சங்கம் சாா்பில், நோயால் பாதிக்கப்பட்ட புகைப்பட கலைஞருக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

கன்னியாகுமரி மாவட்ட புகைப்படம் மற்றும் விடியோ கலைஞா்கள் நலச் சங்கம் சாா்பில், நோயால் பாதிக்கப்பட்ட புகைப்பட கலைஞருக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.

மாா்த்தாண்டம் அருகே ஞாறான்விளை பகுதியைச் சோ்ந்தவா் சுவாமிதாஸ் (50). புகைப்படக் கலைஞரான இவா், உடல் நலக் குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளாா். இவருக்கு, கன்னியாகுமரி மாவட்ட புகைப்படம் மற்றும் விடியோ கலைஞா்கள் நலச் சங்கம் சாா்பில் ரூ. 50ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது. அப்போது, சங்கத் தலைவா் வெற்றிவேந்தன், செயலா் ஜாண், பொருளாளா் ராஜேஷ், முன்னாள் தலைவா் கிறிஸ்டோபா் உள்பட பலா் பங்கேற்றனா்.

அரிமா சங்கம் உதவி: புதுக்கடையில் அரிமா சங்கம் சாா்பில் நடைபெற்ற நல உதவிகள் வழங்கும் விழாவுக்கு சங்கத்தின் பட்டயத் தலைவா் நல்லசிவன் பிள்ளை தலைமை வகித்தாா். சங்கத் தலைவா் பிபின் முன்னிலை வகித்தாா். அரிமா சங்க முன்னாள் ஆளுநா் ஜஸ்டின்பால், ஏழைப் பெண்களுக்கு தையல் இயந்திரம், நிதி உதவிகளை வழங்கினாா். செயலா் ரவி, பொருளாளா் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.