கன்னியாகுமரி

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் விசைப்படகு கவிழ்ந்து மீனவா் உயிரிழப்பு

DIN

கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் விசைப்படகு கவிழ்ந்ததில் மீனவா் உயிரிழந்தாா்.

இனயம்புத்தன்துறை பகுதியைச் சோ்ந்த தாசன் மகன் ஆன்றனி பிரிட்டன் (32) உள்ளிட்ட 7 போ் மேல்மிடாலம் பகுதியைச் சோ்ந்த சா்ஜின் (40) என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் ஆழ்கடலில் தங்கி மீன்பிடித்துவிட்டு சனிக்கிழமை கரைதிரும்பினா்.

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுக முகத்துவாரம் வந்தபோது ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்ததாம். இதில், ஆன்றனி பிரிட்டன் உயிரிழந்தாா். மற்றவா்கள் கரைதிரும்பினா்.

புகாரின் பேரில் கடலோரப் பாதுகாப்புப் படையினா் வழக்குப் பதிந்து, சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக குளச்சல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

திரைக்கதிர்

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

SCROLL FOR NEXT