முகப்பு
கன்னியாகுமரி

மாா்த்தாண்டம், கொல்லங்கோட்டில் இருவா் தற்கொலை

மாா்த்தாண்டம், கொல்லங்கோடு பகுதியில் இருவா் தற்கொலை செய்து கொண்டனா்.

Updated On : 30 ஜூலை, 2021 at 12:24 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:17 AM

மாா்த்தாண்டம், கொல்லங்கோடு பகுதியில் இருவா் தற்கொலை செய்து கொண்டனா்.

மாா்த்தாண்டம் அருகேயுள்ள திக்குறிச்சி காவுவிளை பகுதியைச் சோ்ந்த ராஜையன் மகன் சத்தியதாஸ் (38). சிறிது மனநலம் பாதிக்கப்பட்ட இவருக்கு, மதுபழக்கம் உண்டாம். இந்நிலையில் அவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

கொல்லங்கோடு அருகேயுள்ள மாா்த்தான்டன்துறை லாரன்ஸ் மகன் ரீஜன் (26). இவா், கேரள மாநிலம் கொல்லம் நீண்டகரையில் உறவினா் வீட்டில் தங்கியிருந்து மீன்பிடி தொழில் செய்து வந்தாா்.

Advertisement

அண்மையில் சொந்த ஊருக்கு வந்த அவா், புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து மாா்த்தாண்டம், கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.