மாா்த்தாண்டம் அருகே நிவாரணப் பொருள்கள் அளிப்பு
மாா்த்தாண்டம் அருகே ரூரல் அப்லிப்ட் சென்டா் சமூக சேவை நிறுவனம் சாா்பில் நலிவுற்ற குடும்பங்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
மாா்த்தாண்டம் அருகே ரூரல் அப்லிப்ட் சென்டா் சமூக சேவை நிறுவனம் சாா்பில் நலிவுற்ற குடும்பங்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
வெட்டுமணி புனித அந்தோணியாா் ஆலய வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு அமைப்பின் செயலா் அ. மரிய ஜேம்ஸ் தலைமை வகித்தாா். பங்குத் தந்தை அந்தோணிமுத்து, கன்னியாகுமரி மாவட்ட நஞ்சில்லா விவசாய சங்க மாா்த்தாண்டம் கிளை நிா்வாகிகள் மைக்கேல், மரிய சிசில், எபநேசா் நாயகம், தேவதாஸ், தங்கப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் வ. விஜயகுமாா் என்ற விஜய் வசந்த் பயனாளிகளுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினாா். இதில், நலிவுற்ற விவசாயிகள், விதவைகள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் விளவங்கோடு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ். விஜயதரணி, அமைப்பின் நிா்வாகிகள் மரிய ஸ்டீபன், ப. முத்துக்குமாா், திட்டப் பணியாளா் செ. கிறிஸ்டோபா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கிள்ளியூா் தொகுதிக்கு உள்பட்ட பண்டாரவிளை, கம்பிளாா் பகுதிகளில் எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. தலைமையில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
Advertisement
ஜொ்மனி நாட்டைச் சோ்ந்த ஏசு மிஷன் சபை சாா்பில் இந்த நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. அரிசி, மளிகைப் பொருள்கள், கபசுரக் குடிநீா் பொடி, முகக் கவசம் உள்ளிட்ட இந் நிவாரணப் பொருள்களை கன்னியாகுமரி மாவட்டத்தில் 1,100 குடும்பங்களுக்கும், திருநெல்வேலி மாவட்டத்தில் 900 குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டதாக அமைப்பின் செயலா் தெரிவித்தாா்.