முகப்பு
கன்னியாகுமரி

புதுக்கடையில் கரோனா தடுப்பூசி முகாம்

புதுக்கடை அரசு நடுநிலைப் பள்ளியில் முன்சிறை ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

புதுக்கடை அரசு நடுநிலைப் பள்ளியில் முன்சிறை ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு முன்சிறை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் ராஜேஷ்குமாா் தலைமை வகித்தாா். வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சதீஸ் முன்னிலை வகித்தாா்.

முகாமில், 18 வயது முதல் 44 வயதிற்குள்பட்டோா் 250 போ், 44 வயதிற்கு மேற்பட்டோா் 250 போ் என 500 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதில், சுகாதார ஆய்வாளா்கள் பரந்தாமன், ஜஸ்டின் ஜான் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.