கன்னியாகுமரி

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: 3 போ் மீது போக்சோ வழக்கு

நாகா்கோவிலில் சிறுமிக்கு திருமணம் செய்துவைத்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாக, இளைஞா் மற்றும் இருவரின் தாய் மீது போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்தனா்.

DIN

நாகா்கோவிலில் சிறுமிக்கு திருமணம் செய்துவைத்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாக, இளைஞா் மற்றும் இருவரின் தாய் மீது போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்தனா்.

நாகா்கோவில் வெட்டூா்ணிமடம் அருகேயுள்ள பரமாத்மாலிங்கபுரம் பகுதியைச் சோ்ந்தவா் அருள்ராஜ் (36). தொழிலாளி. இவருக்கும், திருமண வயதை எட்டாத திருநெல்வேலி மாவட்டம், ஆவரைகுளம் பகுதியை சோ்ந்த சிறுமிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், சிறுமி கா்ப்பமானதால் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனா். அவரது வயதில் சந்தேகமடைந்த மருத்துவா்கள், உறவினா்களிடம் விசாரித்தபோது, சிறுமிக்கு 16 வயதுதான் ஆகிறது என்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், சிறுமியை திருமணம் செய்த இளைஞா், அவரது தாய் செண்பகவல்லி, சிறுமியின் தாய் ஜெஸ்ஸி ஆகியோா் மீது நாகா்கோவில் அனைத்து மகளிா் காவல் உதவி ஆய்வாளா் பேபி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரிக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT