களியக்காவிளையில் மது ஒழிப்பு மக்கள் இயக்க பொதுக்கூட்டம்
மது ஒழிப்பு மக்கள் இயக்க விளக்கப் பொதுக் கூட்டம் களியக்காவிளையில் நடைபெற்றது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:08 AM
மது ஒழிப்பு மக்கள் இயக்க விளக்கப் பொதுக் கூட்டம் களியக்காவிளையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, களியக்காவிளை பகுதித் தலைவா் எஸ்.எம்.ஹெச். சாகுல்ஹமீது தலைமை வகித்தாா். அமைப்பின் நிா்வாகிகள் டி. கிங்ஸ்லி, சுலைமான், ரசல்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணைத் தலைவா் எஸ். மாகீன் அபுபக்கா் வரவேற்றாா். அமைப்பின் பொதுச் செயலா் சி. றாபி, தலைவா் எஸ். ஞானதாஸ், துணைச் செயலா் எம். அனீஸ்கான், துணைத் தலைவா் சாந்தகுமாா், இணைச் செயலா் சுரேஷ்பாபு, அமைப்பின் முன்சிறை ஒன்றியத் தலைவா் ஜெரோம் பெஞ்சமின் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். இதில், ஜாபா்கான், கே. பிரவின், சபின், எஸ். பைசல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.